Thursday, March 31, 2011

மதம் கடந்த நேசம்



மதுரை எம்.கே.புரத்தில் முனியாண்டி கோயில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 200 சதுர அடி இடத்தை தானமாக வழங்கி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுசேர்த்திருக்கிறார் மகபூப்பாஷா(40). இப்பகுதியைச் சேர்ந்த இவர், பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்துகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்கள் செல்வதற்காக தனது இடத்தை தானமாக வழங்கி அப்போதே ஒற்றுமையை வெளிப்படுத்திஇருக்கிறார் இவரது தாத்தா நீருஉசேன். இவருக்கு சொந்தமான இடத்தில், சிலர் முனியாண்டி கோயிலை சிறியதாக கட்டினர். இக்கோயிலை விரிவுப்படுத்த திட்டமிட்ட நிர்வாகிகள் இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்து மகபூப்பாஷாவை அணுகினர். அவர் "மதங்கள் வேறாக இருந்தாலும், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கோயிலுக்கு இடத்தை தானமாக வழங்கினால் தான் சரியாக இருக்கும்' என்றார். இதை தொடர்ந்து, நேற்று மதியம் அரசரடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கோயில் நிர்வாகிகள் தங்கச்சாமி, கருப்பையா, ராஜூ ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சார்' என்று நம்மை நெகிழ வைத்தார்.

நன்றி :  தினமலர் நாளிதழ்


விவேகானந்தரின் கனவு





சிகாகோ சர்வமத சபையில் உலகப்புகழ் வாய்ந்த
சொற்பொழிவாற்றிய 8வது நாள் 19-09-1983
அன்று விவேகானந்தர் எதிர்காலத்தில்
மதம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும்
என தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி
-யிருக்கிறார். அந்தக் கருத்துகளை அப்படியே
தன்னுள் கொண்டு திகழ்கிறது, மகான் வேதாத்திரி
மகரிசியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உலக பொது
அருள் நெறி சமயம்.


விவேகானந்தர் அன்று பேசி கருத்துக்கள்.-

என்றாவது உலகம் தழுவிய மதம் (UNIVERSAL
RELEGION)   என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது
இடத்தாலும் காலத்தாலும் எல்லைப்படுத்தப்
படாததாக இருக்க வேண்டும், அந்த மதம்
யாரைப்பற்றி பிரச்சாரம் செய்கிறதோ,
அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக
இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை
எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று
அது கிருஸ்ண பக்தர்கள், கிருஸ்து பக்தர்கள்,
ஞானிகள், பாவிகள் எல்லோரையும் சமமாக
எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ
பெளத்த மதமாகவோ, கிருஸ்தவ மதமாகவோ,
முகமதிய மதமாகவோ இருக்காமல் இவற்றின்
ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும்
வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக
இருக்க வேண்டும். காட்டுமிராண்டி முதல்
ஞானியர் வரை எல்லோருக்கும் இடமளித்து
தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும்
தழுவிக்கொள்ளும் பரந்த மனப்பான்மை
உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில்
பிற மதத்தினரை மதித்தி நடக்கும்
பாங்கு இருக்கும். ஆண், பெண் இருபாலரிடமும்
தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக்கொள்ளும்
மனித இனம் தன் உண்மையான தெய்வீகத்
தன்மையை உணர்வதற்கு உதவி
செய்வதே அதன் நோக்கமாக இருக்கும்.
அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.

விவேகானந்தரின் மேற்கண்ட கனவுகளோடு
தனிமனித ஒழுக்கம் குடும்ப அமைதி
சமுதாய மேன்மை உலக அமைதி ஆகியவற்றையும்
தனது கொள்கையாகக் கொண்டு இயங்கிவரும்
உலக பொது அருள்நெறி சமயம் என்பது
உலக மக்கள் அனைவரையும் மேம்படுத்தவல்லது.
மகான் வேதாத்திரி மகரிசியால் தோற்றுவிக்கப்பட்ட
உலக சமாதான இயக்கம் இதை செயல்படுத்தி
வருகிறது.
.
.
.