Sunday, January 24, 2010

இளமை எனும் பூங்காற்று


கவர்ச்சி படங்களையும் ஒன்றுக்கும் உதவாத விசயங்களையும் எழுதி இளய தலைமுறையின் மனதில் மெல்ல நஞ்சைக் கலக்கும் பத்திரிக்கைகளுக்கு மத்தியில், இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்து ஆக்கபூர்வமான விசயங்களை மட்டுமே கையிலெடுத்து அமைதியாய் ஒரு புரட்சியைத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறை என்ற பத்திரிக்கையைப் படித்தேன். கல்வி, தொழில், ஆராய்ச்சி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மரம் வளர்க்கும் கிராமம், சுய தொழில் குழுக்கள் என்று அத்தனையும் பயனுள்ள விசயங்கள். நமது அறிவார்ந்த இளைஞர்கள் மீது ஆக்கபூர்வமான நம்பிக்கை கொண்டுள்ள அந்த பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற பத்திரிக்கைகளால் தான் திறமையும், நேர்மையும், நம்பிக்கையும் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டி வலிமையான பாரதத்திற்கு வித்திட முடியும். புதிய தலைமுறை பத்திரிக்கையும் அதைச்சார்ந்த அனைவரும் வாழ்க வளமுடன்.

அந்த சில நிமிடத்தில்தான்



மின்சாரம் தடைபட்ட

அந்த சில நிமிடத்தில்தான்

அழகிய நிலா வானில்

அற்புதமாய் ஜொலிக்கக் கண்டேன்.

மண்வாசல் கட்டிலிலே

மல்லாந்து பார்த்திருந்த

சிறுவயது நட்சத்திரங்கள்

சிதறாமல் இருக்கக் கண்டேன்.

பாலகனாய் இருக்கக் கண்ட

பகட்டான மின்மினியின்

எத்தனாம் தலைமுறையோ

என் வீட்டு மரத்தில் இன்னும்...

சர்க்கரை பழத்தை திண்ண

சுற்றிவரும் வெளவாள் கூட்டம்

படபடத்துப் பறக்கும் பாங்கை

பார்த்து நான் வியந்தே நின்றேன்.

இயற்கையின் பாங்கை எல்லாம்

செயற்கைதான் மறைத்தனவோ !

வேசத்தை பூசும் மாந்தர்

நே(நெ)ச முகம் மறந்தே போனோம்.

Sunday, January 3, 2010

நல் மார்க்கமுள்ள திருநாடு


காந்தியும் வள்ளுவனும் கருணைமிகு புத்தனும்

வாடிய பயிர்கண்டு வாடிய வள்ளலாரும்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்ற

முறுக்குமீசை வீரன் முண்டாசு பாரதியும்



ஆறெல்லாம் கடல்நோக்கி மதமெல்லாம் இறைநோக்கி

எம்மதமும் தாழ்வில்லை எல்லாமே சமமென்ற

வீர முழக்கமிட்ட விவேகானந்தரெனும்

மகான் பிறந்த நல் மார்கமுள்ள திருநாடு



தவத்திலும் யோகத்திலும் தளர்விலா உயர்வோடு

குருகுல கல்வியிலே நிகரிலா உயர்வு கொண்டோம்

ஆங்கில கல்வி வந்தே அதிலே ஓர் தாழ்மைகொண்டோம்

எல்லாவில் துறை கண்டோம் வாழ்வியலை தொலைத்துவிட்டோம்



ஐம்பதாண்டு சுதந்திரத்தில் அயராது உழைத்தாலும்

வருமைஎனும் குறைதன்னை நிறையாக்க முடியவில்லை

வானம் பொய்த்திடுமோ வரும் பூச்சி கொன்றிடுமோ - என்று

அரை வயிறை நிரப்பிவிட்டு அதில் பாதி சேமித்தோம்



சேமிக்கும் பழக்கத்தால் பெரும்புயலில் தப்பித்தோம்

வளமிருந்தும் கடன் வாங்கும் பழக்கத்தால் மேற்கத்தார்

பெரும்புயலில் பொருளிழந்து பகட்டுடைந்து நிற்கின்றார்

தர்மம் தலையை கொஞ்சம் காக்கத்தான் செய்கிறது



ஓருலக கூட்டாட்சி சமைத்திடவே வேண்டுமென்று

இராணுவத்து வீண்செலவை சுபிச்சதிற்கு செலவிடவே

யோகம் தவத்தோடு நல்லெண்ண பழக்கங்களை

விதைக்கவந்த நல்லமகான் வேதாத்திரி வாழ்க வாழ்க.


நண்பர் குகன் அவர்களின் நகரத்னா பதிப்பகம்

வெளியிட்ட " காந்தி வாழ்ந்த தேசம் "
கவிதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற
எனது கவிதை.