Monday, October 26, 2009

அம்மா



கருவாயிருக்கையில் எனை
கனவு கண்டவள்.
பிறக்காதிருக்குமுன்னே என்மேல்
பிரியம் கொண்டவள்.
என் நோய்க்கு விழித்திருந்து
வலி பொறுத்தவள் - என்
சாதனையில் சப்தமின்றி
கரைதிருப்பவள்.
சான்றோன் என கேட்க
காத்திருப்பவள்.
தனக்கென வாழாத
தகைமை கொண்டவள்.

10 comments:

கலகலப்ரியா said...

அபாரம்..! யாரும் மறுக்க முடியாத வரிகள்..!

ஈரோடு கதிர் said...

அழகு அம்மா

V.N.Thangamani said...

கருத்துக்கு நன்றி பிரியா
நன்றி கதிர்.

Pavi said...

சான்றோன் என கேட்க
காத்திருப்பவள்.
நல்ல வரிகள் .

V.N.Thangamani said...

கருத்துக்கு நன்றி பவித்ரா

அ. நம்பி said...

நல்ல சிந்தனை; நல்ல எழுத்து; வாழ்த்துகள்.

ஹேமா said...

அப்பா அம்மா என்கிற எங்கள் வழிகாட்டல் தெய்வங்களைப் பற்றி இன்னும் சொல்லிகொண்டே போகலாம் மணி.கண்கண்ட தெய்வங்கள் அவர்கள்.

V.N.Thangamani said...

கருத்து தெரிவித்த திரு நம்பி அய்யா அவர்களுக்கும் அன்பு ஹேமா அவர்களுக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.

தேவன் மாயம் said...

பிறக்காதிருக்குமுன்னே என்மேல்
பிரியம் கொண்டவள். ///

அசத்தல்!

ஈ ரா said...

அருமையான வரிகள்