Tuesday, September 29, 2009

ரகசியம்

வருவாய் என்கிற நம்பிக்கையில்தான்
நாட்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறது
மேகத்தை போலவே பொய்த்துபோகிறது
பாலாய்போன பாவியின் நம்பிக்கை
இன்றில்லை நாளையென்று
தவணை தள்ளிப்போகிறது
ஏனோ தெரியவில்லை மானைக்  காணவில்லை
கோபமா ? இருக்காது
பிடிக்கவில்லையா ? தெரியாது
பயமா ? தேவையில்லை
பாவமா ? ஒன்றுமில்லை
யாருக்கு தெரியும்
இந்த பெண்ணின் மனதில் உள்ள
ரகசியங்கள் .
- ivan ... VN.தங்கமணி

ஒரு தேவதை கண்டேன்


வட்ட நிலவு முகம்
வண்ண நிறத்து உடை
சங்கு கழுத்தினிலே
சற்றோரம் ஒரு மச்சம்
சித்திரம் வரைந்தவன்
திருஸ்டி பொட்டு வைத்தானோ
கன்னம் கோவயடி
கருங்கூந்தல் மேகமடி
சிரிக்கும் உதட்டுகுள்ளே
சிறிய பல்வரிசை
கிளியின் மூக்கழகு  
கீர்த்தனம் பண்ணுதடி
என்னை மயக்கும் கண்கள்
என்னமாய் இருக்குதடி
உண்மை உரைக்கின்றேன்
உனக்கு நிகரில்லை
நீயே கவிதையடி
உன்பெயர் தேவதையோ !

ivan. VN.தங்கமணி

நிலா குளத்தில் ஒருநாள்


















வெள்ளொளி வீசும் நிலவினில் ஒருநாள்
வெண்தாமரை சூழ்ந்தொரு குளத்தில்
இன்புறு கண்ணனும் படகினில் மிதந்து
மென்மன மங்கையர் சூளிசை படிக்க
இதுபோல் ஒருநாள் யாவர்க்கும் வேண்டும்
இதுவே எந்தன் இதயத்து ஆசை

ivan.. VN.Thangamani